மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பந்தல் கால்நாட்டு விழா


மண்டைக்காடு பகவதி அம்ம்ன கோவிலில் மாசித்திருவிழாவுக்காக பந்தல் கால்நாட்டு விழா ஜனவரி 31-ந்தேதி நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா மார்ச்-4 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது. இதற்கான பந்தல் கால்நாட்டுவிழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. விழாவில் அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை, 8.30 மணிக்கு பந்தல் கால்நாட்டு விழாவும், மதியம் 1 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை சந்திரகிரகணம் நடைபெறுவதால், அப்போது நடத்தப்படும் பூஜைகள், பிற்பகலில் நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. பின்னர், மறுநாள் காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.



Leave a Comment