ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழா...


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நால்வரால்  பாடல் பெற்ற சைவ திருத்தலமான ஸ்ரீ இளங்கிலி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆச்சி ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் விழா நடைபெறும். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று கொடியேற்றமும் மூன்றாம் நாள் அதிகார நந்தி சேவையும் 5-ம் நாள் திருக்கல்யாண உற்சவம் 7-வது நாளான திருத்தேரோட்டம் நடைபெற்றது.

இன்று காலை 8:00 மணிக்கு தேரில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளினர். அதன் பின்னர் பக்தர்கள் சிவ சிவ என கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இத்திருத்தேர் நான்கு மாத  வீதிகளிலும் வலம் வந்தது. இந்நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment