நான்காம்படை வீட்டில் ஜன. 22-இல் தைப்பூச விழா கொடியேற்றம்


சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வரும் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அறுபடை வீடுகளில் நான்காம்படை வீடாக அழைக்கப்படுவது சுவாமிமலை முருகன் கோயில். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த விழா வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து 29 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு சிறிய தேரோட்டமும், 31 ஆம் தேதி தைப்பூச நாளன்று மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், தொடர்ந்து காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனகத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.



Leave a Comment