அய்யா வைகுண்டசுவாமி கோயில் தை திருவிழா


கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில், புகழ்பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில், தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமுதாய வேறுபாடுகளைக் களைய கன்னியாகுமரி மாவட்டத்தில் அவதரித்த மகான் என்று அய்யா வைகுண்ட சுவாமி நம்பப்படுகிறார். இவருக்கு சுவாமித்தோப்பு, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோயில்கள் உள்ளன. அய்யாவழி என்ற நெறியில் வைகுண்டசுவாமியை வழிபடும் மக்கள், தலைமை பதியான சுவாமித்தோப்பில் தை மாதம் திருவிழா நடத்துகின்றனர். திருவிழாவின் தொடக்கமாக, இன்று அதிகாலையே கோயில் நடை திறக்கப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, வரும் 26-ம் தேதி கலிவேட்டையும், 29-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.



Leave a Comment