சுந்தர வரதராஜ பெருமாள் கருட சேவை


பிரசித்தி பெற்ற உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவள்ளி நாயிகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி நடைபெ,றறது. இங்கு கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் முக்கிய நிகழ்வாக கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சுந்தர வரதராஜ பெருமாள் அதிகாலை 5.30 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் கருட வாகனத்தில் புறப்பட்டு ராயர் தெரு, மேட்டு தெரு. கருணீகர் தெரு, திருமலையா பிள்ளை தெரு, வீர பெருமாள் அய்யங்கார் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட மாடவீதிகளில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள வைகுந்த வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்துக்கு வந்த உற்சவருக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.



Leave a Comment