தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருவிளக்கேற்றி சிறப்பு பூஜை....


பௌர்ணமியை முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு ஏராளமான பெண்கள் திருவிளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.தேனி நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயிலில் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது

முன்னதாக ஏராளமான பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட திருவிளக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்து விளக்கேற்றி தங்கள் சுற்றும் சூழலும் நலப் பெற வேண்டி திருவிளக்கு பூஜை நடத்தினர்

பின்னர் பச்சை நிற வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு மகா தீபாராதனை நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு சோடச உபச்சாரம் நடத்தினர்

அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பௌர்ணமி தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை கண்டு தரிசித்துச் சென்றனர்.



Leave a Comment