சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்....


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி கந்தசஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கும், 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கும் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 3-ஆம் நாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவருக்கு உச்சிகால அபிஷேகத்துக்கு பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முகவிலாச மண்டபத்துக்கு வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



Leave a Comment