திருப்பதி நகரத்தை அழகுபடுத்த ரூ.188 கோடி...


திருமலை, திருப்பதி நகரத்தை அழகுபடுத்த 188 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களில் நடைபெற உள்ள மனகுடி திருவிழாவுக்காக ரூ.66 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல நவம்பர் மாதம் இறுதியில் ஐதராபாத்தில் உள்ள சன்சாபாத் நகரில் சீனிவாச கல்யாண உற்சவத்தை நடத்துவது எனறும், திருமலை, திருப்பதி நகரை அழகுபடுத்தவும், மின் விளக்குகள் அமைக்கவும், பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.188 கோடி நிதி ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், சொர்லோப்பள்ளி, சீனிவாசமங்காபுரம் சாலைகளை சீர் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்குவது. 6 மாதங்களுக்குத் தேவையான 21 லட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையிலான நெய் கிலோ ரூ.364 வீதம் ரூ.78 கோடியே 28 லட்சம் செலவில் கொள்முதல் செய்வது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சந்திரபிரபை வாகனம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் செலவில் தாயார் செய்வது. அதற்காக 165 கிலோ எடையிலான வெள்ளியை வழங்குவது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆராதனை பீடம், சிம்மாசனம் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் செலவில் தங்க முலாம் பூசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



Leave a Comment