சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்


சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ளது பிரசித்திப்பெற்ற பாலசுப்பிரமணியன் கோயில். இங்கு சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளி- மணவாளர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திருமண வரம் வேண்டி பங்கேற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் உற்சவருக்கு போடப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன. வள்ளிக்கு அணிவித்த மாலையை ஆண்களும், முருகனுக்கு அணிவித்த மாலையை பெண்களும் அணிந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் உற்சவர் வள்ளி மணவாளருடன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Leave a Comment