பெரிய தேர் பவனி... வேளாங்கண்ணியில் குவியும் பக்தர்கள்


வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதா பாடல்களை பாடிய படி புனிதப் பாதையில் சென்றனர்.

தொடர்ந்து 7 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடக்கிறது.

விண்மீன் ஆலயத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்று இரவு பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாகண்ணியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.



Leave a Comment