தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திர தீமிதி திருவிழா


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீ மிதித் திருவிழா நடைபேற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை ஸ்ரீசவுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து நாக்கில் வேல் குத்தியும். பால் குடம் எடுத்தும் வீதி உலாவாக வந்து தண்டாயுதபாணிசுவாமி கோயில் முன்பாக பரப்பட்டிருந்த தீ குழியில் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.



Leave a Comment