திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யானம்


ஆறு படை வீடுகளில் முதல் படை வீடாள் திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா 14 நாட்கள் நடைபெறும். கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் 14 நாள் திருவிழா தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
12ம் நாள் திருவிழாவான இன்று அருள்மிகு திருக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருமண நிகழ்ச்சி திருக்கோயில் ஆறுகால் மண்டபத்தில் மதியம் 12:39 க்கு கடக லக்னத்தில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மற்ற பூஜைகள் மற்றும் தீபாரனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சிகாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிருந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் கோவிலில் எழுந்தருளினர். திருக்கல்யாண நிகழச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் தாங்கள் திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக் கொண்டரை்.



Leave a Comment