கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய பிரதோஷ விழா...


கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷ நிகழ்ச்சி – மங்கல்வார பிரதோஷமான செவ்வாய்கிழமை பிரதோஷத்தினையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி அருள் பெற்றனர்.

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மிகவும் விஷேசம் வாய்ந்தவையாகவும், மிகுந்த தொன்மை மற்றும் வரலாறு மிக்க கரூர் அருள்மிகு ஸ்ரீ ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் தேய்பிறை பிரதோஷம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை அன்று மங்கள்வார பிரதோஷமான விஷேச பிரதோஷ நிகழ்ச்சியில், பசுபதீஸ்வரருக்கு முன்னர் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகங்களும் அதனை தொடர்ந்து சோடசம்ஹார நிகழ்வும், பின்னர் பல்வேறு வண்ணமலர்களாலும், பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பருமானுக்கு வெள்ளிக்கவசங்கள் சாத்தப்பட்டு, பின்னர் கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்திகளும் அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.



Leave a Comment