ராகு - கேதுவால் ஏற்படும் அனைத்து தோஷங்களில் இருந்து விடுபட


சுக்கிரன்;

கஞ்சனூர்;

சுக்கிர தோஷம், பலஹீன, உள்ளவர் இங்குள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

வழித் தடம்: சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ளது.

திருநாவலூர்;

இங்குள்ள பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர திசை பாதிப்புக்கும் உரிய ஸ்தலம்.

வழித் தடம்; விழுப்புரம்- உளுந்தூர் பேட்டை சாலையில் உள்ளது.

ராகு:

திருநாகேஸ்வரம்;

ராகுவினால் ஏற்படும் அனைத்து தோசங்களினால் திருமணத்தடை, பத்ர தோசம், மாங்கல்ய தோசம் ஏற்படும். இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி, ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.

வழித் தடம்; கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்:

ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீமத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீமத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ யதிராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷமும் நீங்கும்.

வழித் தடம்; செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது.

கதிராமங்கலம்;

இங்குள்ள வன துர்க்கை முன் பக்கம் பார்ப்பதற்கு பென் உருவமாகவும் பின்பக்கம் பார்ப்பதற்கு நாகம் படம் எடுத்தது போன்றும் தோன்றும். கம்பர் வழிபட்ட ஸ்தலம். ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர் துர்க்கைக்கு அபிசேகம் செய்து வழிபட கிரக தோஷம் நீங்கும். இத்துர்க்கை ல்லித சகஸ்ர நாமத்தில் வரும் வித்யா வன துர்க்கையாகும்.

வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ. தூரம்

கேது:

திருக்காளத்தி;

பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம். கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம்.

வழித் தடம்; திருப்பதிக்கும் சென்னைக்கும் நடுவில் உள்ளது

கீழ்ப்பெரும் பள்ளம்;

இங்குள்ள நாகநாத சாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள கேதுவை வழிபட கேதுவினால் ஏற்படும்  தோஷம் நீங்கும்.

 



Leave a Comment