உகாதி பண்டிகைக்கு தயாராகும் திருப்பதி....


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் 9 தேதி உகாதி தெலுங்கு வருட பிறப்பு ஆஸ்தானம்  நடைபெறள்ளது. இதையொட்டி  காலை சுப்ரபாத சேவை மற்றும் நித்ய பூஜைகளுக்கு பிதகு 6 மணி முதல் 11 மணி வரை கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்  நடைபெற்றது. இதனால்  பக்தர்கள்  6 மணி நேரத்துக்கு பிறகு 11 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( உகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்  நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று நித்ய பூஜைகளுக்கு பிறகு  கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகிழங்கு உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

கோயில் ஆழ்வார்  திருமஞ்சனம் முடிந்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, கோயில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி ,   மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.



Leave a Comment