பிரசித்தி பெற்ற நாகூர் நாகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி...


பிரசித்தி பெற்ற நாகூர் நாகநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் நாகநாத சுவாமி கோயில், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் தலமாகும்.  ராகு, கேது,காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் நாகூர் நாகநாத சுவாமி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான்  துலாம் ராசியில் இருந்து  கன்னி ராசிக்கு பிற்பகல் 3.40 மணிக்கு பிரவேசித்தனர். தொடர்ந்து ராகு பகவானுக்கு பரிகார சாந்தி ஹோமங்கள், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று பிரசித்தி பெற்ற நாகூர் நாகநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சியில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மட்டுமல்லாமல் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகளை செய்து சுவாமியை வணங்கி சென்றனர்.



Leave a Comment