குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விசு திருவிழா....


குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கொடி மரத்துக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 8-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 9-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. 11-ந் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
12-ந் தேதி (புதன்கிழமை) சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.



Leave a Comment