மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம்...


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திருக்கோவிலில் மீனாட்சிநாயக்கர் மண்டபத்தில் பாகனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல் நடந்தது.

அதன்பிறகு சுவாமி, அம்மன் முன்னிலையில் பாகனுக்கு அங்கம் வெட்டிய லீலையும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் ஆகியோர் ஆவணி மூல வீதி களில் உலா வந்தனர். மாலையில் கோவிலில் உள்ள யானை மகால் முன்பு திருஞான சம்பந்தர் எழுந்தருளினார். அவர் முன்பு சைவ சமய ஸ்தாபித்த லீலை ஓதுவார்களால் பாடப்பெற்றது.

இன்று காலை சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து ஆவணி வீதி, மேலமாசி வீதி வழியாக இம்மையிலும் நன்மை தருவார் கோவிலை அடைந்தனர். அங்கு வளையல் விற்ற லீலை நடந்தது. தொடர்ந்து சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.



Leave a Comment