மீண்டும் தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ராஜகோபுர கட்டுமானப் பணி...


திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜகோபுர கட்டுமானப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாகப் போற்றப்படுவது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில். திருத்தணி கோயிலில் ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், 2011-இல் பல்வேறு காரணங்களால் ராஜகோபுர கட்டுமானப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ராஜகோபுரத்தைக் கட்டி முடிக்க தமிழக அரசு ரூ. 1.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, ராஜகோபுரம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கின. இதையொட்டி, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Leave a Comment