பழநி கோயிலில் இலவசமாக பஞ்சாமிர்த பிரசாதம்... அரசு அறிவிப்பு


பழநி கோயிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு 20 கிராம் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.

சட்டப்பேரவையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ...

அவர் வெளியிட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளை தற்போது பார்க்கலாம்...
• சென்னை தண்டையார் பேட்டை முருகன் கோயில், அகஸ்தீஸ்வரர் மற்றும் சேனி யம்மன் கோயில்களில் ரூ.59 லட்சத்தில் திருப்பணிகள் மேற் கொள்ளப்படும்.
• பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் தினமும் மாலை சாயரட்சை பூஜை முடிந்தபிறகு 2 ஆயிரம் பக்தர்களுக்கு தொன்னையில் 20 கிராம் பஞ்சாமிர்த பிரசாதம் இலவசமாக வழங்கப்படும்.
• திருவண்ணாமலை ஏரி குப்பம் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பிரகார மண்டபம்,
• பைங்கினூர் ஆதிபராசக்தி கோயில் திருமண மண்டப பணிகள்,
• ஆரணி கைலாசநாதர் கோயி லுக்கு பிரகார மண்டப புனர மைப்பு,
• புதுக்கோட்டை நார்த்தா மலை முத்துமாரியம்மன் கோயில், ஜம்புகேஸ்வரர் கோயில்களுக்கு மராமத்து பணிகள் ஆகியவை ரூ.1.16 கோடியில் மேற்கொள்ளப்படும்.
• மேல்மலையனூர் அங்காள அம்மன் கோயிலில் ரூ.14 லட்சத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
• திருப்பூர் மேட்டுப்பாளையம் நாட்டராயசாமி, காஞ்சிபுரம் திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் களில் முடிகாணிக்கை மண் டபங்கள் ரூ.32.20 லட்சத்தில் கட்டப்படும்.
• சேலம் கஞ்சமலை சித்தேஸ் வர சுவாமி,
• திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி,
• சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோயில் களில் பூஜை பொருட்கள் விற் பனை கடைகள், வணிக கட்டிடங் கள் கட்டப்படும்.
• சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை பராமரிப்புக்கு ரூ.14 லட்சத்தில் கொட்டகை அமைக்கப்படும்.
• திருவாரூர் கோணேஸ்வர சுவாமி,
• வேலூர் ரங்காபுரம் கோதண்டராமர்,
• திருவாலி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்களின் குளங்கள் ரூ.28.20 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்படும்.
• பெரும்பாலான கோயில் களில் நந்தவனம் அமைத்து பரா மரிக்கும் நிலை குறைந்துவிட்டது. எனவே, இடவசதியுள்ள 51 கோயில்களில் ரூ.2.55 கோடி யில் புதிய நந்தவனங்கள் அமைக் கப்படும்.
• ஏற்கெனவே உள்ள நந்தவனங்கள் சீரமைக்கப் படும் என்பது உள்ளிட்ட 16 அறிவிப்பு களை அமைச்சர் வெளியிட்டார்.



Leave a Comment