திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுந்தரர் குருபூஜை


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

திருக்கோயிலில் சண்முகர் சன்னதியில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் சன்னதிகள் உள்ளன. ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தை 3 முறை வலம் வந்து, உற்சவர் சன்னதியில் சேர்த்தியானார். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.



Leave a Comment