திருப்பதியில் அறை முன்பதிவுக்கு முன்பணம் தேவையில்லை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மூலம் தங்கும் அறைகள் முன்பதிவுக்கு இனி முன் பணம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அறை வாடகை மட்டும் செலுத்தினால் போதும். இந்த திட்டம் அகஸ்டு 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 4வது யாத்ரீக சமுதாயக்கூடத்தில் பக்தர்கள் தங்கவும், தங்களது உடமைகளை அங்கேயே வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கும், அறை முன்பதிவின்போது, செலுத்தப்படும் முன்பணம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, அவர்கள் அறைவாடகை மட்டும் செலுத்தினால் போதும்.



Leave a Comment