நவநாத சித்தர்கள்


- "மாரி மைந்தன்" சிவராமன்

நவநாத சித்தர்கள் பாகம் 1


சித்தர் பட்டியல் 
என்பது 
விசித்திரமானது.

'நவநாத சித்தர்கள்' 
என்று 
ஒரு பட்டியல் உண்டு. 'நவநாத வர்க்கம்' 
என்றும் சொல்வார்கள்.

சித்தர்களை 
வடக்கே 
வரிசைப்படுத்தியவர்
நவநாத சித்தர்கள் 
எனப் 
பெயர் சூட்டினர்.

அதே பாணியில் 
தெற்கே 
தமிழகத்தின் சித்தர்கள் பதினெண் சித்தர்கள் என்று 
அழைக்கப்பட்டனர்.

முதன்முதலில் 
சித்தர் 
பட்டியலிட்டவர்கள்
9 சித்தர்கள் அடங்கிய பட்டியலைத் தான் வெளியிட்டார்கள்.

அதில் கூட
வெவ்வேறு 
பெயர்கள் உள்ளன.

சத்யநாதர்
சதோக நாதர் 
ஆதி நாதர்
அனாதி நாதர் 
வகுனி நாதர் 
மதங்க நாதர் 
மச்சேந்திர நாதர் கஜேந்திர நாதர் 
கோரக்க நாதர் 

இந்த 
ஒன்பதின்மர்களும் நவநாத சித்தர்கள் என்கிறது 
ஓர் ஆதிகாலப் பட்டியல்.

அபிதான சிந்தாமணி வேறொரு பட்டியலைப்
வேறு பெயர்களுடன் தருகிறது.

சத்துவ நாதர் 
சாலோக நாதர்
ஆதி நாதர் 
அருளி நாதர் 
கடயிந்திர நாதர் 
கோரக்க நாதர் 
குக்குட நாதர்.

இன்னொரு 
பட்டியலில்
வேறு சிலர்.

அந்தளேந்திரர் 
கோரக்கர் 
கொங்கணர் 
நாகார்சுநர்
மச்சேந்திரர் 
பீமநாதர்
அருணகிரி நாதர் 
புஜங்க குருநாதர் ஆதிநாதர்
 
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கணநாதர் 
என்பவரும் 
நாக நாதர் என்கிறது 
ஒரு குறிப்பு.

எத்தனை பேர் 
இருந்தால் என்ன 
அவர் தம் 
வாழ்வும் வரலாறும் 
அவர் கற்றுத் தந்த சித்துக்களும் 
அருளிச் சென்ற நூல்களும் 
சித்தர்களின் 
சிறப்பைச் சொல்கின்றன. நல்வழி காட்டுகின்றன.

நவநாத சித்தர்களைப் பார்க்கும் புண்ணியம் யாருக்கும் கிடைக்காது.

அபூர்வமாக 
விண்வெளிப் பயணத்தில் சிலருக்கு இனிய கானம் மிதந்து செல்வதை உணரும்
பாக்கியம் கிட்டும்.

அந்த 
இனிய கானம் தான் நவநாத சித்தர்களின் இருப்பு.

சித்தர் நெறியில் 
சிறந்தோர்க்கே கிடைக்கும் 
இந்த வாய்ப்பு.

ஆதி சித்தர்களென அடையாளம் கொண்டவர்களை 
நவநாத சித்தர்கள்
எனக் கொண்டு 
அவர்தம் 
சிறப்புகளைச்
சிறிது காண்போம்.

சிறிதே இருக்கிறது -
அவர்கள் பற்றிய 
குறிப்புகள்.

நவநாத சித்தர்கள் அம்மனை 
வழிபடுபவர்கள்
சக்தி உபாசகர்கள்
என்பது வெளிப்படை.

நவநாத சித்தர்களில்
முதல் சித்தர் 
சத்ய நாதர்.

'ஞானச் சித்தர்' 
என்பது 
போற்றப்படும் 
அவர் திருநாமம்.

கால நிர்ணயம் அற்றவர்களே 
சித்தர்கள் என்பது 
ஆன்மீக நம்பிக்கை.

ஞானப் பாடல்கள் 35 
மெய் ஞானம் 12 
என சத்ய நாதரின்
47 பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

'மனோன்மணி'
என்று 
அம்பிகையை முன்னிறுத்தியே பாடியிருக்கிறார் 
சத்ய நாதர்.


இரண்டாவது சித்தர் சதோக சித்தர்.

யோக ஞானம் 
பற்றி 
அதிகம் பாடியதால் 
'யோக சித்தர்'
என்றழைக்கிறது 
சித்தர் உலகம்.

அம்பிகையை 
வணங்கும் 
சக்தி உபாசகரான 
சதோக நாதர் அடிப்படையில் 
ஒரு சைவர்.

47 கண்ணிகள்
கொண்ட 
இவரது பாடல்கள் 'மாங்குயிலே' 
என நிறைவு கொள்கின்றன.


மூன்றாவது சித்தர் ஆதிநாதர்.

வடமொழியிலிருக்கும் 
வேதங்கள் 
உபநிடதங்கள் முதலானவற்றைத்
தமிழில் பாடியவர்.

அதனால் 
'வேதாந்தச் சித்தர்' 
என்ற சிறப்பு பெயர் இவருக்கு உண்டு.

சித்தர் இலக்கியத்திற்கு பெருமை சேர்ப்பவை நவநாத சித்தர் பாடல்கள்.

அவற்றில் குறிப்பிடத்தக்கது 
ஆதி நாதர் அருளிய 
32 கண்ணிகளால் 
ஆன பாடல் தொகுதி.

ஞான சூத்திரம் 
27 பாடல்கள். 
கண்ணியில்
நூறு வகை.

யோனி பேதம் 
எழுவகைத் தோற்றம் பிரணவம்
ஐந்தெழுத்து 
ஆறாதார வடிவம்
சமாதி 
மண் 
பெண் 
பொன்னாசை முதலானவற்றை விரித்துச் சொல்லி உணர்ந்து படிப்போரை உய்விக்கின்றார்
ஆதி நாதர்.

ஞான சூத்திரத்தில் 
வாசி மார்க்கம் 
காயகற்பம் 
நாக கற்பம்
வியாதிகள் பற்றி விரிந்துரைக்கின்றார்.


நான்காவது சித்தர் காலாங்கி நாதர்.

'அனாதி நாதர்' 
என்பது 
சிறப்புப் பெயர்.

காலாங்கிநாதர் 
பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு.

காலாங்கி நாதரே பிற்காலத்தில் 
கமலமுனி 
என்கிறது 
ஒரு சித்தர் குறிப்பு.

காலாங்கி 
திருமூலரின் சீடர். போகருடைய குரு.

உபதேச ஞானத்தில் 
முக்தி ரகசியம் 
தியானம் செபிக்கும் மந்திரம் 
சுழிமுனை 
சிவயோக ஞானம்
வாசியோக ஞானம் 
என 
ஆன்மீக நுட்பத்தைக்
கற்றுத் தருகிறார் காலங்கி நாதர்.

சீன தேசத்தவர் 
எனினும் 
தமிழகம் வந்து 
சித்தராகி 
சதுரகிரியில் 
நெடுநாள் இருந்தவர் காலங்கி நாதர்.

சுண்ணம் தயாரிப்பதில் உள்ள சூட்சமங்கள்
காலாங்கி நாதர் 
உலகுக்குத் தந்த 
கொடையெனச் சொல்லலாம்.

துருசுச் சுண்ணம் 
நிமிளைச் சுண்ணம் கருவங்கச் சுண்ணம்
நாகச் சுண்ணம் முதலானவற்றின் தயாரிப்பு முறைகளை மறை சொற்களாய் பாடலாக்கி 
அருளி உள்ளார்
 அனாதி நாதர்.

நவநாதர்களில் 
5ஆவது சித்தர்
வகுளி நாதர்.

 மௌன உபதேசம் அருளியதால் 
'மௌன சித்தர்'
என
பூஜிக்கப்படுகிறார்.

சக்தி உபாசகரான
வகுளி சித்தர்
12 பாடல்களாக 
குறிஞ்சிப்பா படைத்திருக்கிறார்.

8 பாடல்களில் 
கற்பூர தேகசம்
பிரணவ துரியம் மௌனத்திலிருந்து மார்க்கம் 
நெற்றிக்கண் ரகசியம் மகா தீட்சை முதலானவற்றை 
விளக்கி உள்ளார்.

எளிமையான 
பாடல்களில் 
வலிமையான 
ஞானத்தைப் பதிந்திருப்பது 
வகுளி நாதரின் 
சிறப்பு.

ஊணுறக்கம் நீக்கி 
யோக நிஷ்டை புரிந்து உற்றாரைத் துறந்து மலைக் குகையில் 
தவமிருந்து 
கண்ணுக்கு எட்டாத பரவெளியைக் கண்டோம்.

பின்னர் 
காயகற்பம் உண்டு உடலை கற்பமாக பெற்றோம்.

அதன் பின்னர் 
சக்தி சக்கர பீடமேறி 
சுத்த வெளியைக் கண்டோம்.

சகலமும்
பரவெளியென 
உணர்ந்து 
சித்தி பெற்ற முக்தர்களைத் 
தினம் தினம் 
தரிசித்தோம்.'

என 
ஞானநிலைப்
படிகளை 
வகுளி நாதர்
படிப்படியாய் வகுத்திருக்கிறார்.

இது 
அவரது 
அருள் நிறை
படைப்பாற்றலுக்குச் சான்று.


(மீதமுள்ள நவநாத சித்தர்கள் பற்றி அடுத்த பதிவில்...)
 



Leave a Comment