பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்....


சிவகங்கை மாவட்டம், பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பழமையான குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் முடிந்து யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக மார்ச் 9-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

ஏப். 24-ம் தேதி கும்பாபிஷேக விழாவுக்கான கணபதி ஹோமம் நடைபெற்றது. ஏப். 27-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ராஜகோபுரம், மற்ற விமானங்களுக்கும், காலை 10:30 மணிக்கு மூலஸ்தான விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



Leave a Comment