மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம்....


மழை வேண்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், குமரி மாவட்டத்தில் உள்ள 7 கோயில்களில் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு யாகத்தை பத்மநாபன் போற்றி நடத்தினார்.
இதில், குமரி மாவட்ட அதிமுக செயலர் அ. விஜயகுமார் எம்.பி., கோயில் மேல்சாந்தி சட்டநாதன்குருக்கள், பத்மநாபபுரம் தேவசம் தொகுதிக் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், குமரி மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், வெள்ளிமலை, குமாரகோவில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.



Leave a Comment