பௌர்ணமி அன்று ஆதிபராசக்தி அருள் பெற....


மூவுலகை ஆளுகின்ற அன்னை ஆதிபராசக்தி தான் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என முப்பெரும் தேவியாக அருள் பாலிக்கிறார். 

பௌர்ணமி தினத்தில் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவது மிக உயர்ந்த விசேஷமான நாளாகும். இந்த நாட்களில் அம்பாளை வழிபடுவது சிறப்பானது எனவும் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவர் என்பது அனைவரும் அறிந்ததே.  

எனவே முப்பெரும் சக்திகளுள்  ஒன்றான ஞான சக்தியாகிய அருள்மிகு வடிவுடை அம்மனுக்கு 05.06.2020 பௌர்ணமி வெள்ளிக் கிழமை அன்று உற்சவர் அம்மன் அபிஷேகம் மற்றும் திரிசதி அர்ச்சனை ஆகிய வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. 

பக்தர்கள்  https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 05.06.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணி வரையில் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை திரிபுர சுந்தரி அம்மன் அருள்பெறவும். 



Leave a Comment