அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவர் திருவீதி உலா...


ராசிபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவர் திருவீதி உலா பக்தர்கள் சாமி தரிசனம்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.   இங்கு மாசி மாத மகா சிவராத்திரி திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தினந்தோறும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

மேலும் திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ரிஷப வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், புலி வாகனம், அன்ன வாகனம், காமதேனு  குதிரை வாகனம், மயில்வாகனம் போன்ற பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்வாக  முத்துக்கள் பதித்த முத்தங்கி அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரத வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. அம்மனை வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment