உலகில் உள்ள அபூர்வமான சில கோயில்கள்!!!


கோயில்களில் மிகவும் அபூர்மாமாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும், உலகில் உள்ள சில கோயில்களைப் பற்றிப் பார்ப்போம்.


மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha) :
பாங்காக்கில் அமைந்துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர் சிலையானது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலைக்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.


ஸ்வேடகோன் பகோடா (Shwedagon Pagoda) :
புத்தர் கோவிலிலேயே மிகவும் பழமையானதும், வரலாற்றில் முக்கியமானதுமானது என்றால் அது மியான்மரில் இருக்கும் ஸ்வேடகோன் பகோடா தான். இதில் பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த்தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும்பாலும் பர்மாவில் தான் காணப்படும். இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதோடு, இரவிலும், பகலிலும் நன்கு மின்னும்.

தக்த்சாங் மடம் (Taktshang Monastry) :
பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம் தான் தக்த்சாங் மடம். இது தவம் செய்வதற்கு சிறந்த ஒரு மடம். இந்த மடமானது 1692 இல் கட்டப்பட்டது. இங்கு பத்மசம்பவர் என்னும் இரண்டாம் புத்தர் புலியின் மீது ஏறி வந்ததால், இந்த மடத்திற்கு வந்ததால், இதற்கு இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

தங்க கோயில் (Golden Temple) :
இந்தியாவில் உள்ள பஞ்சாம் மாநிலத்தில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் "ஹர்மந்திர்" ஆலயம், மிகவும் புகழ்பெற்ற, பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு புனித ஆலயம். இந்த தங்க ஆலயமானது பொன்னால் மின்னுவதோடு, குளத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

பிரம்பனன் (Prambanan) :
இது உலகிலேயே மற்றொரு அழகான புகழ்பெற்ற கோயில். இந்த கோயிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்காக கட்டப்பட்டுள்ளது. இது தான் இந்தோனேஷியாவிலேயே மிகவும் பெரிய கோயில். இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமூட்டக்கூடியவை.

வாட் ராங் குன் (Wat Rong Khun) :
தாய்லாந்து என்றாலே புத்த கோயில்கள் திரும்பிய இடமெல்லாம் இருக்கும். அத்தகைய கோவில்களில் வாட் ராங் குன் என்னும் புத்த கோயில், வெள்ளை மெசைக் கற்களால் மிகுந்த கலை நயத்துடன், இன்னும் கட்டப்பட்டு வருகிறது.

போரோபுதூர் (Borobudur) :

இந்தோனேஷியா தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள போரோபுதூர், மகாயான பௌத்த நினைவுச் சின்னம். இது 2,672 புடைப்புச் சிற்பங்களையும், 504 புத்த சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது ஆறு சதுர வடிவ மேடைகளுடன், மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது.

ஸ்ரீரங்கநாதர் ஆலயம் (Sri Ranganathaswamy Temple) :

உலகிலேயே மிகவும் பெரிய இந்து கோயில் என்றால் அது ஸ்ரீரங்கநாதர் கோவில் தான். இந்த கோவிலின் சிறப்பே கோபுரம் தான். இந்த கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், இந்துமதப் புராணங்களின் படி சித்திகரிக்கப்பட்டது. இந்த பெரிய கோபுரமானது குறைந்தது 200 அடி உயரத்துடன் இருப்பதோடு, 15 கதைகளையும் கொண்டது.



Leave a Comment