ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா


திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடக்கிறது.
நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில்.

திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பாடப்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வியாழக்கிழமை (04/10/2018) இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



Leave a Comment