இடையூறுகளை நீக்கும் இஷ்ட தெய்வங்கள்


மனிதர்களுக்கு ஏற்படும் எண்ணற்ற இடையூறுகளைப் போக்குவதற்கு குறிப்பிட்ட பரிகாரங்கள் இருப்பது போல குறிப்பிட்ட தெய்வங்களை போற்றி வணங்கினால் எப்பேர்ப்பட்ட இன்னல்களும் வந்த இடம் தெரியாமல் அழிவதோடு பூரண ஆரோக்கியமும், நிறைந்த செல்வமும் வளமான வாழ்வும் பெறலாம் என்பது பெரியோர் உரைத்த உண்மை. இவற்றை பயபக்தியுடன் பின்பற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

விக்னங்கள் இடையூறுகள் நீங்குவதற்கு வணங்க வேண்டிய கடவுள்- சித்தி விநாயகர்.

செல்வம் சேர- ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ லட்சுமிநாராயணர், ஸ்ரீ வரலட்சுமி.

நோய் தீர ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணாமூர்த்தி.

வீடும், நிலமும் பெற -செவ்வாய் பகவான், ஸ்ரீ சுப்பிரமணியர்.

ஆயுள், ஆரோக்கியம் பெற-ருத்திரன்.

மனவலிமை, உடல்வலிமை பெற -ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்.

கல்வியில் சிறந்து விளங்க-ஸ்ரீ சரஸ்வதி தேவி.

திருமணம் நடைபெற- ஸ்ரீ காஞ்சிகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மன்
.
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கெளரி.

புத்திர பாக்கியம் பெற- சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணன்.

தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வேங்கடாசலபதி.

புதிய தொழில் துவங்க- ஸ்ரீ கஜலட்சுமி.

விவசாயம் தழைக்க-ஸ்ரீ தான்ய லட்சுமி.

சாப்பாடு கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி.

வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்.

சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐயப்பன்.

பகைவர் தொல்லை நீங்க- திருசெந்தூர் முருகன், சஷ்டி விரதம் மேற்கொள்ளுதல்.
பில்லி சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, சக்கரத்தாழ்வார், ஸ்ரீ நரசிம்மர்.

திருஷ்டி விலக- ஸ்ரீ முத்துமாரி.

அழியாச் செல்வமும், ஞானமும், சக்தியும் பெற- சிவ ஸ்துதி போற்ற வேண்டும்.



Leave a Comment