சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் பாடிட உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாள் பகல் மற்றும் இரவில் உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். 28-ம் தேதி இரவு தெருவடைச்சான் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிக்ஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதியுலா நடக்கிறது. தேர் திருவிழா 1-ம் தேதியும், 2-ம் தேதி மதியம் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 3-ம் தேதி இரவு முத்து பல்லக்கு வீதியுலா நடக்கிறது.



Leave a Comment