மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை ...


சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக தலங்களில் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலும் ஒன்று. இங்கு நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 15-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. 40 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையில் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை பிரசாதமான அப்பம், அரவணை தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.



Leave a Comment