திருப்பதியில் பக்தர்களுக்கு சுடுதண்ணீர்....


திருப்பதியில் திருப்பதியில் பக்தர்களுக்கு சுடுநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலில் இருந்து மோகாலிமிட்டா வரை நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு வாகனங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏழுமலையான் கோவில் உள்ளே மகா துவாரத்தில் இருந்து தங்கக்கொடி மரம் வரை பக்தர்களுக்கு மழை, வெயிலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும். அலிபிரி மலைப்பாதைகளில் மண், கற்கள், பாறைகள் சரிந்து விழுவதை தடுக்க ஐ.ஐ.டி.நிபுணர்களை வரவழைத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருமலையில் வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து மின் கம்பங்களிலும் எல்.இ.டி. பல்புகளை பொருத்த வேண்டும். கோவிலில் வழக்கம்போல் மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும். கோவிலில் உள்ளே சீனிவாச கல்யாண உருவப்படங்கள், விமானப் பிரகாரம், கல்யாண மண்டபம், வண்டிகாகிலி ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். அன்னப்பிரசாதம் கொடுக்கும் இடத்தில் தரை வழுக்குவதாக பக்தர்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். அந்த இடத்தில் தரையை சுத்தம் செய்ய வேண்டும். கைக்கழுவும் இடத்தில் பக்தர்களுக்கு சுடுநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தரிசனத்துக்காக வரும் பக்தர்களையும், அவர்களின் பைகளையும் தீவிர பரிசோதனை செய்ய வேண்டும். திருமலையில் ஜனவரி மாதத்துக்குள் மின்வயர் பொருத்தும் பணியை முடிக்க வேண்டும். ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்களை தேவஸ்தான அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.



Leave a Comment