சின்னசேஷ வாகனத்தில் கோபால அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமி


திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மயிலிறகை சூட்டிக்கொண்டு வேணு கோபாலன் அலங்காரத்தில் மாட வீதிகளில்  மலையப்ப சுவாமி வலம் வந்தார். மாட வீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை மாட வீதிகளில் பல்வேறு விதமான நடன கலைஞர்கள் ஆந்திரா தமிழ்நாடு கேரளா கர்நாடகா மட்டுமின்றி இதர மாநிலங்களிலிருந்து வந்து பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு தங்களது கலையை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.



Leave a Comment