வேப்பம்பட்டி ஸ்ரீ திரௌபதியம்மன் திருத்தேர் விழா....


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதியம்மன் 6-ஆம் ஆண்டு திருத்தேர் விழா  வெகு விமர்சையாக நடைபெற்றது. வேப்பம்பட்டியில் அருள்பாலிக்கும் தர்மபத்தினி குருச்சேத்திரப் காபலி  ஸ்ரீ திரௌபதியம்மன் தேர்த்திருவிழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி வருகின்ற எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் ஒன்று கூடி ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் கூழ் ஊற்றுதல் கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிறகு ஸ்ரீ திரௌபதியம்மன் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர். திரௌபதி அம்மனின் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்கள் என கலந்து கொண்டதால் தேர் திருவிழா கலை கட்டியது.



Leave a Comment