திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை திருவிழா கோலாகலம்...


அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்  நேற்றைய முன் தினம் அஸ்வினி தொடங்கி நேற்று பரணி இன்று ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இன்று ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம் வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்றன  இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா தெலுங்கானா. கர்நாடகா. பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

காவடி சுமந்துவந்து மொட்டை அடித்து சரவண பொய்கை திருக்குளத்தில் நீராடி முருக கடவுளை வழிபடுவதற்கு திருக்கோயில் சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பக்தர்கள் காவடி செலுத்த தனி மண்டபம்  முடி காணிக்கை மற்றும் சிரமம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோயில அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் உஷாரவி மோகனன் சுரேஷ் பாபு, நாகன் துணை ஆணையர் விஜயாமற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்தனர்.



Leave a Comment