ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தங்கத்தேரில் பழனி தண்டாயுதபாணி...


பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தங்கத்தேரில் சுவாமி திருவீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து விழிபாடு செய்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  

மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையம் ,படிப்பாதை , யானை பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று பொது தரிசன வழி, சிறப்பு கட்டண தரிசன வழிகளில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று இரவு ஏழு முப்பது மணியளவில் நடைபெற்ற தங்கத்தேரில் முருகப்பெருமானை காட்சி தந்தார் இதனை தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் ஆடி கிருத்திகை முன்னிட்டு தங்க தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Leave a Comment