நாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்!


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் வரசித்தி விநாயகர். இந்த விநாயகர் கிணற்றில் சுயம்புவாக தோன்றினார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது.

இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றளவும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆனால் கடவுள்களே தங்களை வெளிப்படுத்தி காட்டி, கோயில் கட்ட அற்புதங்களும் நடந்தது உண்டு. காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகரும் ஒரு திருவிளையாடல் மூலம் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி, பிறகு கோயில் கட்ட வைத்தார்.

 

விநாயகரின் மகிமை!

 

விநாயகரின் மகிமையை அறிந்த ஊர் பொதுமக்கள். பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். இன்றும் விநாயகரைசுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான். இதை காணும்போது உள்ளம் உருகும், நெஞ்சம் நெகிழும்.

 பக்தர்களுக்கு பேரருள் புரியும் காணிப்பாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம். கொல்லபல்லி கிராமத்தை சேர்ந்த பெஜவாடா சித்தைய்யா என்பவர் ஒரு வெள்ளி கவசம் சுவாமிக்கு வழங்கினார். ஆனால் தொடர்ந்து விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு வருவதால் வெள்ளி கவசம் விநாயகர் சிலைக்கு பொருந்தவில்லையாம். இந்த அதிசயத்தால் பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். 

 கோயில் அருகே மணிகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச்செல்வதாக ஒரு நம்பிக்கை.

பிரார்த்தனை!

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் ஸ்ரீவரசித்தி விநாயகரை வணங்கி சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், கோயிலுக்கு வந்து பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.

இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயிலில் ஆஞ்சநேயர், நவகிரகங்களும் அருள்பாலிக்கின்றன.

 அதேபோல் தினமும் மாலை “சத்தியப்பிரமாணம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும்போது, அவர்கள் பொய் கூறி இருந்தால் கட்டாயம் விநாயகர் உடனடியாக தண்டனை வழங்கி விடுவாராம். 

 இதனால் உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் நீங்க, வரசித்தி விநாயகரை மனமுருகி வழிபட்டால் குறைகள் நீங்கி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

 விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.



Leave a Comment