திருமண வரம்..குழந்தை பாக்கியம் அருளும் ஆடிப்பூரம்!


ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதவிதமாக அலங்காரம் செய்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரத் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு சிறப்பானது. தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. திருமணத் தடையுள்ள கன்னிப்பெண்களும், குழந்தை செல்வம் கேட்டு அம்பாளின் அருளைப் பெறுவதற்கு பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுவர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா முளைக்கட்டு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கும் வளைகாப்பு விழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பெண்கள் விரதமிருந்து அம்மனுக்கு வளையல் சாற்றி அதை திரும்ப அணிந்து கொண்டால் அவர்களை பிடித்திருக்கும் தோஷமெல்லாம் நிவர்த்தியாகி அவர்கள் வாழ்வில் மங்களம் பெருகும்.

 



Leave a Comment