தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவரா?


 

தட்சிணாமூர்த்தி என்பவர் யார்? குரு என்பவர் யார்? மூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் தட்சிணாமூர்த்தி வேறு. இருவரும் ஒருவரல்ல.ஆனால் நிறையபேர் தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என நினைத்துக்கொண்டு வழிபாடு செய்கின்றார்கள்.(நானும் அவ்வாறு வழிபாடு செய்துவந்துள்ளேன்) உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அது தொடர்பான விவரங்கள் வருமாறு:-

 தட்சிணாமூர்த்தி என்பவர் சிவ வடிவம். குரு பகவான் என்பவர் கிரகவடிவம். இவர் சிவன். அவர் பரகஸ்பதி. தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி.குரு அதிகாரி. தட்சிணாமூர்த்தி சிவகுரு. தெற்குநோக்கி உள்ளார். குரு தேவகுரு. வடக்கு நோக்கி உள்ளார். தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர்,சனாதனர்,சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுககு போதிப்பவர்.
குரு பகவான் நவகோற்களில் குரு என்கின்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்கிளல் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன்தோன்றுதல் மறைதல் என்கின்றத தன்மைகள் இல்லாதவர். குருவோ உதயம் அஸ்தமனம் என்கின்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவவேற்றுமைகளை கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர்.இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...
தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக(சிவகுருவாக)வழிபடுங்கள். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குருபகவான் என்றே மாற்றிவிட்டார்கள்.
அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கின்றார்கள்.குருவிற்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கின்றார்கள்.கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கின்றார்கள்.
குருபெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் சாந்தி பரிகாரங்கள் செய்கின்றார்கள்.
இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள்சொல்கின்றார்கள் என்கின்றபோதும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகின்றார்கள்.
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும்தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்கு செய்வதை இவருக்கு செய்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். அதுவும் தவறு.
குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பரிம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. 
எனவே தட்சிணாமூர்த்தியும் குருபகவான ஒன்றே என நம்மை நாமே குழுப்பிக்கொள்ளக்கூடாது.



Leave a Comment