ஸ்ரீ கரபத்ர அவதூத பொன்னம்பல சுவாமி மடத்தில் 87 வது குருபூஜை விழா!


வாணியம்பாடி தேவஸ்தானம் ஸ்ரீ கரபத்ர அவதூத பொன்னம்பல சுவாமி மடத்தில் 87 வது குருபூஜை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேவஸ்தானம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கரப்பாத்திர அவதூத பொன்னம்பல சாமிகளின் மடத்தில் 87 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் குருவின் ஜீவசமாதியில் ஆரத்தி காண்பிக்கப்பட்டு தரிசிக்க வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில்  திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்கு மடத்தின் சார்பாக மரியாதை செலுத்தி அன்னதானமும் வழங்கப்பட்டது.



Leave a Comment