காஞ்சி காமாட்சிக்கு தங்க திரிசதி மாலை


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி, அம்பாளுக்கு தங்க திரிசதி மாலை அணிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக் கோயிலில் நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையொட்டி கடந்த 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அகண்ட பாராயணம் நிகழ்ச்சி சுமங்கலிகள் மூலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு அணிவிப்பதற்காக 300 நாமாவளிகள் கொண்ட தங்க திரிசதி மாலை தயார் செய்யப்பட்டது.
இந்த மாலை காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரால் காமாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த திரிசதி மாலையை ஏராளமான பக்தர்கள் பார்த்து வழிபட்டனர்.



Leave a Comment