பகவதி அம்மன் வெள்ளி பல்லக்கில் அம்மன் ஊர்வலம்....


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் 3-வது நாளான நேற்று அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் வருதல் நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் 3-வது நாளான நேற்று அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் வருதல் நடந்தது.
5-ம் திருவிழாவான மார்ச் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு சமயமாநாடும் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு பேச்சிவிளாகம் இசக்கியம்மன் கோவிலில் இருந்து சந்தனகுடங்கள் நிரப்பப்பட்டு மணவாளக்குறிச்சி மணல்ஆலை வளாகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து சந்தன குடம் ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக செல்கிறார்கள். அப்போது யானை மீது களபம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம், பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு கோவிலை வந்தடைகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.



Leave a Comment