திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க புதிய விதிமுறை!


திருப்பதி ஏழுமலையான் கோவில் அறைகள் வாடகைக்கு எடுக்க மத்திய, மாநில அரசின் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக 50 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையிலான அறைகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதி, திருமலையில் தேவஸ்தான ஓய்வு அறைகள் வாடகைக்கு பெற இனி கட்டாயம் மத்திய, மாநில அரசின் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளில் எதெனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை தேவை எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



Leave a Comment