மதுரையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் 


திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மதுரையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நாளை மாலை நடைபெறுகிறது. மதுரை சுந்தரராஜபுரத்தில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இத்திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. திருக்கல்யாணத்தைக் காண வருவோருக்கு தேவஸ்தானம் மற்றும் பக்தர்கள் அமைப்பினர் பிரசாதங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவர். திருக்கல்யாணத்துக்கு அனுமதி இலவசம்.  திருக்கல்யாண ஏற்பாடுகளை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வித்யாவதி, வீரபாஞ்சனில் உள்ள டி.வி.எஸ்.லட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.



Leave a Comment