பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உண்டியலில் ரூ.1.75 கோடி ரொக்கம் உள்ளிட்ட காணிக்கைகள் இருந்தன.

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் கடந்த 24 நாள்களுக்குப்பின் நிரம்பின.
இதையடுத்து திங்கள்கிழமை கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

இதில், ஒரு கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 213 ரூபாய் ரொக்கம் இருந்தது. மேலும் தங்கம், வெள்ளிக் காசுகள், தாலிச்சங்கிலி, வேல், உருவங்கள் என 715 கிராம் தங்கம் இருந்தது. அதேபோல 10,700 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன.

மேலும், பல்வேறு நாடுகளின் 1,481 கரன்சிகளும், பித்தளைப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள், முந்திரி, ஏலக்காய் மாலைகள் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.



Leave a Comment