திருமலை உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி....


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 2.60 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 24 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதேபோல மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.300, ரூ.50க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெள்ளி கிழமை முதல் சனிக்கிழமை முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.2.60 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.



Leave a Comment