ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.....


ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கேரளாவில் பாரம்பரிய படகு போட்டியும் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் நடைபெறும்.ஓணம் பண்டிகையின் நிறைவு நாளில், அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்கின்றனர். அவற்றில் அடை, அவியல், அடைபிரதமன், பால் பாயசம், காலன், ஓலன், தோரன், இஞ்சி புளி, எரிசேரி, மிளகாய் வற்றல் மிகவும் பிரபலமானவை.



Leave a Comment