சென்னையில் 2500 விநாயகர் சிலைகள் ....


சென்னையில் 2 ஆயிரத்து 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வரும் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் 2 ஆயிரத்து 500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment