சிவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை....


ராசிபுரம் அடுத்த பட்டணம் சிவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வெகுவிமர்சியாக நடைபெற்றது: சங்கடஹர சதுர்த்தி விழா கோலாட்டம் கும்மி அடித்து பெண்கள் நடனம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் ஓம் சிவ சக்தி விநாயகர் கோவிலில்    சங்கடஹர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது.  .

முன்னதாக விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் யான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.  இதில் பட்டணம் கிராமப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   மேலும் முன்னதாக மகளிர் அணியினரின் கோலாட்டமும், கும்மியாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு பக்தி பாடல்களுக்கு சிறப்பாக பெண்கள் கோலாட்டம்  அடித்து சிறப்பாக நடனம் ஆடினர். தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் 108 தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



Leave a Comment